DrikganitaDrikganita

Anubhūti · Murugan·Tamil

கந்தர் அனுபூதி

Kandar Anubhūti

அருணகிரிநாதர்

Aruṇagirināthar

அனுபூதி என்பது அனுபவ ஞானம். அருணகிரிநாதர் முருகனின் அருளில் பெற்ற உணர்வைப் பாடிய 51 பாடல்கள்; தொடக்கத்தில் விநாயகருக்குக் காப்பு. ஸ்கந்த சஷ்டி, ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகத்தில் விசேஷம்.

Anubhūti means lived realisation. Fifty-one verses of Aruṇagirināthar on Murugan’s grace, preceded by a kāppu to Vināyaka — especially on Skanda Ṣaṣṭī, Āḍi Kṛttikā, and Vaikāsi Viśākam.

  1. நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

    Neñcak kaṉakallu nekiḻntu urukat Tañcattu aruḷ caṇmukaṉukku iyalcēr Ceñcoṟ puṉai mālai ciṟantiṭavē Pañcakkara āṉai patam paṇivām.

  2. 1

    ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே.

    Āṭum pari, vēl, aṇicēval eṉap Pāṭum paṇiyē paṇiyā aruḷvāy Tēṭum kayamā mukaṉaic ceruvil Cāṭum taṉi yāṉaic cakōtaraṉē.

  3. 2

    உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனும் நீ அலையோ எல்லாமற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே.

    Ullāca nirākula yōka vitac Callāpa vinōtaṉum nī alaiyō Ellāmaṟa eṉṉai iḻanta nalam Collāy murukā curapūpatiyē.

  4. 3

    வானோ புனல் பார் கனல் மாருதமோ ஞானோதயமோ நவில் நான்மறையோ யானோ மனமோ எனை ஆண்ட இடம் தானோ பொருளாவது சண்முகனே.

    Vāṉō puṉal pār kaṉal mārutamō Ñāṉōtayamō navil nāṉmaṟaiyō Yāṉō maṉamō eṉai āṇṭa iṭam Tāṉō poruḷāvatu caṇmukaṉē.

  5. 4

    வளைபட்ட கைம்மாதொடு மக்களெனும் தளைபட்டழியத் தகுமோ தகுமோ கிளைபட்டெழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே.

    Vaḷaipaṭṭa kaimmātoṭu makkaḷeṉum Taḷaipaṭṭaḻiyat takumō takumō Kiḷaipaṭṭeḻu cūr uramum kiriyum Toḷaipaṭṭuruvat toṭu vēlavaṉē.

  6. 5

    மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்று அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே.

    Maka māyai kaḷaintiṭa valla Pirāṉ mukam āṟum moḻintu Moḻintilaṉē akam māṭai, maṭantaiyar Eṉṟu ayarum cakamāyaiyuḷ niṉṟu tayaṅkuvatē.

  7. 6

    திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ பணியா என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே.

    Tiṇiyāṉa maṉō cilai mītu, Uṉatāḷ aṇiyār, aravintam arumpu matō Paṇiyā eṉa, vaḷḷi patam Paṇiyum taṇiyā atimōka tayā paraṉē.

  8. 7

    கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

    Keṭuvāy maṉaṉē, kati kēḷ, Karavātu iṭuvāy, vaṭivēl iṟaitāḷ Niṉaivāy cuṭuvāy neṭu vētaṉai Tūḷpaṭavē viṭuvāy viṭuvāy viṉai yāvaiyumē.

  9. 8

    அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே.

    Amarum pati, kēḷ, akam ām Eṉum ip pimaram keṭa meyp Poruḷ pēciyavā kumaraṉ kirirāca kumāri Makaṉ camaram poru tāṉava nācakaṉē.

  10. 9

    மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன் தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல, நிர்பயனே.

    Maṭṭūr kuḻal maṅkaiyar maiyal Valaip paṭṭu, ūcalpaṭum paricu eṉṟu Oḻivēṉ taṭṭu ūṭu aṟa vēl Cayilattu eṟiyum niṭṭūra nirākula, nirpayaṉē.

  11. 10

    கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே.

    Kār mā micai kālaṉ varil, Kalapat tērmā micai vantu, etirap Paṭuvāy tār mārpa, valāri talāri Eṉum cūrmā maṭiyat toṭuvē lavaṉē.

  12. 11

    கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.

    Kūkā eṉa eṉ kiḷai Kūṭi aḻap pōkā vakai, Meypporuḷ pēciyavā nākācala vēlava Nālu kavit tiyākā curalōka cikāmaṇiyē.

  13. 12

    செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன், பிறவான், இறவான் சும்மா இரு, சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

    Cemmāṉ makaḷait tiruṭum tiruṭaṉ Pemmāṉ murukaṉ, piṟavāṉ, iṟavāṉ Cummā iru, col aṟa Eṉṟalumē ammā poruḷ oṉṟum aṟintilaṉē.

  14. 13

    முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

    Murukaṉ, taṉivēl muṉi, nam kuru eṉṟu Aruḷ koṇṭu aṟiyār aṟiyum taramō uru Aṉṟu, aru aṉṟu, uḷatu aṉṟu, ilatu Aṉṟu, iruḷ aṉṟu, oḷi aṉṟu eṉa niṉṟatuvē.

  15. 14

    கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

    Kaivāy katirvēl murukaṉ kaḻalpeṟṟu Uyvāy, maṉaṉē, oḻivāy oḻivāy mey Vāy viḻi nāciyoṭum cevi Ām aivāy vaḻi cellum avāviṉaiyē.

  16. 15

    முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

    Murukaṉ, kumaraṉ, kukaṉ, eṉṟu Moḻintu urukum ceyal tantu, uṇarvu Eṉṟu aruḷvāy poru puṅkavarum, puviyum Paravum kurupuṅkava, eṇ kuṇa pañcaraṉē.

  17. 16

    பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே.

    Pērācai eṉum piṇiyil piṇipaṭṭu Ōrā viṉaiyēṉ uḻalat takumō vīrā, Mutu cūr paṭa vēl Eṟiyum cūrā, cura lōka turantaraṉē.

  18. 17

    யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற, வேலவர் தந்ததனால் பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர், நடவீர் இனியே.

    Yām ōtiya kalviyum, em aṟivum Tāmē peṟa, vēlavar tantataṉāl pū Mēl mayal pōy aṟam meyp Puṇarvīr nāmēl naṭavīr, naṭavīr iṉiyē.

  19. 18

    உதியா, மரியா, உணரா, மறவா, விதி மால் அறியா விமலன் புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதி காவல, சூர பயங் கரனே.

    Utiyā, mariyā, uṇarā, maṟavā, Viti māl aṟiyā vimalaṉ putalvā, Atikā, anakā, apayā, amarā Pati kāvala, cūra payaṅ karaṉē.

  20. 19

    வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா அடி அந்தம் இலா அயில் வேல் அரசே மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

    Vaṭivum taṉamum maṉamum kuṇamum Kuṭiyum kulamum kuṭipō kiyavā aṭi Antam ilā ayil vēl aracē Miṭi eṉṟu oru pāvi veḷippaṭiṉē.

  21. 20

    அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண, விக்ரம வேள், இமையோர் புரிதாரக, நாக புரந்தரனே.

    Aritākiya meyp poruḷukku Aṭiyēṉ uritā upatēcam uṇarttiyavā Viritāraṇa, vikrama vēḷ, Imaiyōr puritāraka, nāka purantaraṉē.

  22. 21

    கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே.

    Karutā maṟavā neṟikāṇa, eṉakku Irutāḷ vaṉacam tara eṉṟu Icaivāy varatā, murukā, mayil Vākaṉaṉē viratā, cura cūra vipāṭaṇaṉē.

  23. 22

    காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுர பூபதி, மேருவையே.

    Kāḷaik kumarēcaṉ eṉak karutit Tāḷaip paṇiyat tavam eytiyavā Pāḷaik kuḻal vaḷḷi patam Paṇiyum vēḷaic cura pūpati, mēruvaiyē.

  24. 23

    அடியைக் குறியாது அறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடி விக்ரம வேல் மகிபா, குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே.

    Aṭiyaik kuṟiyātu aṟiyā maiyiṉāl Muṭiyak keṭavō muṟaiyō muṟaiyō Vaṭi vikrama vēl makipā, Kuṟamiṉ koṭiyaip puṇarum kuṇa pūtaraṉē.

  25. 24

    கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல, புரந்தர பூபதியே.

    Kūrvēl viḻi maṅkaiyar koṅkaiyilē Cērvēṉ, aruḷ cēravum eṇṇumatō Cūr vēroṭu kuṉṟu toḷaitta Neṭum pōr vēla, purantara pūpatiyē.

  26. 25

    மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ, அடியேன் அலையத் தகுமோ கையோ, அயிலோ, கழலோ முழுதும் செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

    Meyyē eṉa vevviṉai vāḻvai Ukantu aiyō, aṭiyēṉ alaiyat Takumō kaiyō, ayilō, kaḻalō Muḻutum ceyyōy, mayil ēṟiya cēvakaṉē.

  27. 26

    ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத, மன அதீதா சுரலோக சிகாமணியே.

    Ātāram ilēṉ, aruḷaip Peṟavē nītāṉ oru caṟṟum Niṉaintilaiyē vētākama ñāṉa vinōta, Maṉa atītā curalōka cikāmaṇiyē.

  28. 27

    மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயில் ஏறிய வானவனே.

    Miṉṉē nikar vāḻvai virumpiya Yāṉ eṉṉē vitiyiṉ payaṉ iṅku Ituvō poṉṉē, maṇiyē, poruḷē, Aruḷē, maṉṉē, mayil ēṟiya vāṉavaṉē.

  29. 28

    ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே, நவிலத் தகுமோ யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே.

    Āṉā amutē, ayil vēl Aracē, ñāṉākaraṉē, navilat takumō Yāṉ ākiya eṉṉai viḻuṅki, Veṟum tāṉāy nilai niṉṟatu taṟparamē.

  30. 29

    இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே.

    Illē eṉum māyaiyil iṭṭaṉai Nī pollēṉ aṟiyāmai poṟuttilaiyē Mallēpuri paṉṉiru vākuvil eṉ Collē puṉaiyum cuṭar vēlavaṉē.

  31. 30

    செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று ஒவ்வாதது என உணர்வித் ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

    Cevvāṉ uruvil tikaḻ vēlavaṉ, Aṉṟu ovvātatu eṉa uṇarvit Tatutāṉ avvāṟu aṟivār aṟikiṉṟatu Alāl evvāṟu oruvarkku icaivippatuvē.

  32. 31

    பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

    Pāḻvāḻvu eṉum ip paṭumāyaiyilē Vīḻvāy eṉa eṉṉai vitittaṉaiyē Tāḻvāṉavai ceytaṉa tām uḷavō Vāḻvāy iṉi nī mayil vākaṉaṉē.

  33. 32

    கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே.

    Kalaiyē pataṟik, kataṟit talaiyūṭu Alaiyē paṭumāṟu, atuvāy viṭavō Kolaiyē puri vēṭar kulap Piṭitōy malaiyē, malai kūṟiṭu vākaiyaṉē.

  34. 33

    சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா, முருகா, கருணாகரனே.

    Cintākula illoṭu celvam Eṉum vintāṭavi eṉṟu viṭap Peṟuvēṉ mantākiṉi tanta Varōtayaṉē kantā, murukā, karuṇākaraṉē.

  35. 34

    சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல, சண்முகனே கங்காநதி பால, க்ருபாகரனே.

    Ciṅkāra maṭantaiyar tīneṟi Pōy maṅkāmal eṉakku varam Taruvāy caṅkrāma cikāvala, Caṇmukaṉē kaṅkānati pāla, krupākaraṉē.

  36. 35

    விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய் மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா, சுர பூபதியே.

    Vitikāṇum uṭampai viṭā viṉaiyēṉ Katikāṇa malark kaḻal eṉṟu aruḷvāy Mati vāḷnutal vaḷḷiyai allatu Piṉ tutiyā viratā, cura pūpatiyē.

  37. 36

    நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான் வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே.

    Nātā, kumarā nama eṉṟu Araṉār ōtāy eṉa ōtiyatu epporuḷ Tāṉ vētā mutal viṇṇavar cūṭum Malarp pātā kuṟamiṉ pata cēkaraṉē.

  38. 37

    கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே.

    Kirivāy viṭu vikrama vēl Iṟaiyōṉ parivāram eṉum patam Mēvalaiyē purivāy maṉaṉē poṟaiyām Aṟivāl arivāy aṭiyōṭum akantaiyaiyē.

  39. 38

    ஆதாளியை, ஒன்று அறியேனை அறத் தீது ஆளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கு இறைவா வேதாள கணம் புகழ் வேலவனே.

    Ātāḷiyai, oṉṟu aṟiyēṉai aṟat Tītu āḷiyai āṇṭatu ceppumatō Kūtāḷa kirāta kulikku iṟaivā Vētāḷa kaṇam pukaḻ vēlavaṉē.

  40. 39

    மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே, குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவ சங்கர தேசிகனே.

    Māēḻ caṉaṉam keṭa Māyaiviṭā mūēṭaṇai eṉṟu muṭintiṭumō Kōvē, kuṟamiṉ koṭitōḷ puṇarum Tēvē civa caṅkara tēcikaṉē.

  41. 40

    வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதணோடு திரிந்தவனே.

    Viṉai ōṭa viṭum katir Vēl maṟavēṉ maṉaiyōṭu tiyaṅki Mayaṅkiṭavō cuṉaiyōṭu, aruvit tuṟaiyōṭu, Pacun tiṉaiyōṭu, itaṇōṭu tirintavaṉē.

  42. 41

    சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே.

    Cākātu, eṉaiyē caraṇaṅ kaḷilē Kā kā, namaṉār kalakam ceyum Nāḷ vākā, murukā, mayil Vākaṉaṉē yōkā, civa ñāṉa upatēcikaṉē.

  43. 42

    குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

    Kuṟiyaik kuṟiyātu kuṟittu aṟiyum Neṟiyait taṉivēlai nikaḻttiṭalum ceṟivu Aṟṟu, ulakōṭu urai cintaiyum Aṟṟu aṟivu aṟṟu, aṟiyāmaiyum aṟṟatuvē.

  44. 43

    தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.

    Tūcā maṇiyum tukilum puṉaivāḷ Nēcā murukā niṉatu aṉpu Aruḷāl ācā nikaḷam tukaḷāyiṉa Piṉ pēcā anupūti piṟantatuvē.

  45. 44

    சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும் படி தந்தது சொல்லு மதோ வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம் காடும், புனமும் கமழும் கழலே.

    Cāṭum taṉivēl murukaṉ caraṇam Cūṭum paṭi tantatu collu matō Vīṭum, curar māmuṭi, vētamum, Vem kāṭum, puṉamum kamaḻum kaḻalē.

  46. 45

    கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ குரவா, குமரா, குலிசாயுத, குஞ் சரவா, சிவயோக தயாபரனே.

    Karavākiya kalvi uḷār kaṭai Ceṉṟu iravā vakai meyp Poruḷ īkuvaiyō kuravā, kumarā, Kulicāyuta, kuñ caravā, civayōka tayāparaṉē.

  47. 46

    எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா, கதிர் வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே.

    Em tāyum eṉakku aruḷ Tantaiyum nī cintākulam āṉavai tīrttu Eṉaiyāḷ kantā, katir vēlavaṉē, Umaiyāḷ maintā, kumarā, maṟai nāyakaṉē.

  48. 47

    ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.

    Āṟu āṟaiyum nīttu ataṉ Mēl nilaiyaip pēṟā aṭiyēṉ, Peṟumāṟu uḷatō cīṟāvaru cūr Citaivittu, imaiyōr kūṟā ulakam kuḷirvittavaṉē.

  49. 48

    அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

    Aṟivu oṉṟu aṟa niṉṟu, aṟivār Aṟivil piṟivu oṉṟu aṟa niṉṟa, pirāṉ Alaiyō ceṟivu oṉṟu aṟa vantu, Iruḷē citaiya veṟi veṉṟavarōṭu uṟum vēlavaṉē.

  50. 49

    தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

    Taṉṉan taṉi niṉṟatu, tāṉ Aṟiya iṉṉam oruvarkku icaivip patuvō Miṉṉum katir vēl vikirtā, niṉaivār Kiṉṉam kaḷaiyum krupai cūḻ cuṭarē.

  51. 50

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

    Uruvāy aruvāy uḷatāy ilatāy Maruvāy malarāy maṇiyāy oḷiyāy Karuvāy uyirāyk katiyāy vitiyāy Kuruvāy varuvāy aruḷvāy kukaṉē.

  52. 51

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

    Uruvāy aruvāy uḷatāy ilatāy Maruvāy malarāy maṇiyāy oḷiyāy Karuvāy uyirāyk katiyāy vitiyāy Kuruvāy varuvāy aruḷvāy kukaṉē.

தொடர்புடைய விழா & விரதம்

Linked festivals & vrata